• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி நில மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வௌ்ளத்தடுப்பு விசேட கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அங்கீகாரம் கோரல்
- கொழும்பு தலைநகர் சார்ந்த பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு அபாயத்தைக் குறைப்பதற்காகவும் சுற்றாடல் நட்புறவுமிக்க நிலைபேறுடைய நகர மயமாக்கலை உறுதிப்படுத்தும் பொருட்டும் வௌ்ளத்தடுப்புக்கான விசேட கருத்திட்டங்கள் பல 2016 ஆம் ஆண்டிலே நடைமுறைப்படுத்தும் பொருட்டு காணி நில மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்கீழ் உயிரினத் பல்வகைமைத் தன்மையுடனான முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் கொழும்பு நகரத்திற்கு வெளியே வௌ்ளத்தடுப்பினை நோக்காகக் கொண்டு களுஓயா மழைநீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு கருத்திட்டத்தின் கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளது இதற்கமைவாக,. 2016 ஆம் ஆண்டிலே 3,878 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது