• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத திணைக்களத்தின் மலைநாட்டுப் புகையிரத சேவைக்காக புகையிரத என்ஜின்களின் மற்றும் பெட்டிகளின் தேவை
- புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத இயந்திர அணியின் 50 சதவீதமானவை ஏற்கனவே முப்பது (30) வருட பொருளாதார ஆயுள் காலத்தை விஞ்சியுள்ளதோடு, நம்பகத்தன்மையானதும் வினைத்திறன் மிக்கதுமான புகையிரத சேவையொன்றை வழங்கும் பொருட்டு புதிய எஞ்சின்களை சேர்த்துக் கொள்ளும் மற்றும் பொருளாதார ரீதியில் பயனற்ற எஞ்சின்களை படிப்படையாக அப்புறப்படுதும் பணியானது செய்யப்படவேண்டியுள்ளது. இதற்காக 2014 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் பத்து (10) வருட காலத்திற்கான கொள்வனவு திட்டமொன்று வகுத்தமைக்கப்பட்டுள்ளதோடு, இந்த குழுவின் சிபாரிசுக்கு அமைவாக மலைநாட்டு புகையிரத சேவைக்காக 12 புதிய எஞ்சின்களையும் 09 பவர்செட்டுக்களையும் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .