• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலவந்தமாக காணாமாற்போகச் செய்யப்படுகையிலிருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் கையொப்பமிடுதலும் அதை வலுவாக்கம் செய்தலும்
- "பலவந்தமாக காணமாற்போகச் செய்யப்படுவதற்கு ஆள் எவரும் ஆட்படக்கூடாது" என்னும் தத்துவத்தின் மீது அடிப்படையாய் அமைந்துள்ள மேற்போந்த சமவாயத்தின் மூலம் பலவந்தமாக காணாமற்போகச் செய்வித்தல் மனித உரிமை மீறுகையொன்றாக வரைவிலக்கணப்படுத்தியுள்ளதோடு, அவ்வாறு காணாமற்போகச் செய்வித்தலை தடைசெய்து அது குற்றவியல் குற்றமொன்றாக கருதி சட்டங்களை ஆக்கும் பொருட்டு சகல அங்கத்துவ நாடுகளும் உடன்பாடொன்றை செய்துகொண்டுள்ளன. தற்போது 94 நாடுகள் இதில் கைச்சாத்திட்டுள்ளதோடு, 51 நாடுகளினால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் தீர்ப்புக்கும் அதன் தொலைநோக்குக்கும் அமைவாக செயலாற்றி சலக பிரசைகளினதும் மனித உரிமையை பாதுகாக்கும் அத்துடன் மோதல்கள் மீண்டும் ஏற்படாதென்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு பலவந்தமாக காணாமற்போகச் செய்வதிலிருந்து சகலரையும் பாதுகாப்பது தொடர்பிலான சருவதேச சமவாயத்தில் கைச்சாத்திடுவதற்கும் இந்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை நாட்டில் அமுல்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.