2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதார கல்விப் பணியகத்திற்கு 07 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் - சுகாதார மேம்பாட்டு பணிகளை விருத்தி செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அடைவதற்கு ஒத்தாசை நல்குவது சுகாதார கல்விப் பணியகத்தின் முக்கிய பணியாகும்.அதற்காக பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் இணைந்து சுகாதார கல்வி விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் இந்த நிறுவனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் பணிகளை மிக முறையாக நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் போதுமான இடவசதிகளுடனான கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |