2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் - மட்டக்களப்பு விமான நிலையத்தை வர்த்தக நோக்கிலான பிரயாண சேவைக்காக அபிவிருத்தி செய்யும் நோக்கில் விமான நிலைய முனைவிட கட்டடமொன்றை நிருமாணித்தல், விமான ஓடுபாதை, விமானங்கள் வானேறு முன்னரான நிலப்பாதை மற்றும் விமானங்கள் நிறுத்தும் கடுந்தரைப் பரப்பு போன்றவற்றின் திருத்த வேலைகளுக்காக கடந்த காலத்தில் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் வேலைகள் இதுவரை முடிவுறவில்லை. இயைபுள்ள நிருமாணிப்பு பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்காக இலங்கை விமானப்படைக்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |