• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை மாவட்டத்தில் நிருமாணிக்கப்படும் சமூக கல்வி நிலையம் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் பெரும் வெற்றியளித்துள்ளதோடு, இந்த பெண்கள் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி சங்கமொன்றாக பதிவு செய்துகொண்டு அவர்களுடைய சுயதொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கருத்திட்டத்தின் வெற்றியை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இதற்கு சமமான கருத்திட்டமொன்றை அம்பாறை மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்களின் பொருட்டு இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.