• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை புனித அரசமரம் அமைந்துள்ள காணித்துண்டை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்குதல்
- களுத்துறை புனித அரசமரம் நாட்டின் பல இலட்சம் பௌத்த பக்தர்களின் கௌரவத்திற்கு பாத்திரமாயுள்ளது. இந்த புனித அரசமரம் மற்றும் அங்குள்ள சைத்திய, வணக்கஸ்தலம் போன்ற வழிபாட்டு இடங்களையும் புனித அரசமரத்தின் கீழ் பாகம் அமைந்துள்ள மொத்த விஸ்தீரனம் 3.41 ஹெக்டயார் கொண்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான ஏழு (07) காணித் துண்டுகளை கொண்டுள்ளதோடு, நீண்டகாலமாக இந்த காணி களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காணித் துண்டுகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கு வழங்கும் பொருட்டு காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.