2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை பலப்படுத்துவதற்கான கருத்திட்டம் - சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித்துறையை பலப்படுத்துவதும் மற்றும் தொழில்வாய்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த வங்கியுடன் கலந்துரையாடுவதற்கும் அதற்குரிய உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |