• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேகப் பாதைக் கருத்திட்டம் - பொத்துஹரயில் இருந்து கலகெதர வரையிலான III ஆம் பகுதியை நிருமாணிப்பதற்கு ஒப்பந்தக்காரர்களையும் உள்நாட்டு மேற்பார்வை மதியுரைஞர்களையும் தெரிவு செய்தல்
- மத்திய அதிவேக பாதையின் பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையிலான III ஆம் பகுதி 32.5 கிலோமீற்றர்களைக் கொண்டுள்ளதோடு, இந்த பகுதியின் நிருமாணிப்பு வேலைகள் 36 மாத காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முழுமையான பாதை பகுதியை 4.5 - 7.5 கிலோமீற்ற்ர்கள் தூர அளவினைக் கொண்ட சமமான பெறுமதிகளின் கீழ் 5 பொதிகளாக போட்டிக் கேள்வி கோரி உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு நிருமாணித்துக் கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது