2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
போக்குவரத்து சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்காக நகரங்களுக்கும் துணை நகரங்களுக்கும் அண்மையில் புதிய பேருந்து நிலையங்களை நிருமாணித்தலும் நவீன மயப்படுத்தலும் - நகரங்களுக்கும் துணை நகரங்களுக்கும் அண்மையில் புதிய பேருந்து நிலையங்களை நிருமாணிப்பதற்கும் தற்போதுள்ள பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து சேவையின் தரத்தினை மேமம்படுத்தி நகரத்திற்கு நாளாந்தம் வருகைதரும் பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து சேவையையும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்கீழ் பின்வரும் நகரங்களில் புதிதாக பேருந்து நிலையங்களை நிருமாணிப்பதற்கும் / நவீனமயப்படுத்துவதற்கும் அவற்றுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: * யாழ்ப்பாணம் நகரத்தில் புதிய பேருந்து நிலையமொன்றை நிருமாணித்துல் - 150 மில்லியன் ரூபா * ஹிங்குரக்கொட நகரத்தில் புதிய பேருந்து நிலையமொன்றை நிருமாணித்துல் - 60 மில்லியன் ரூபா * மெதிரிகிரிய நகரத்தில் புதிய பேருந்து நிலையமொன்றை நிருமாணித்துல் - 25 மில்லியன் ரூபா * கதுருவெல நகரத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்துதல் - 40 மில்லியன் ரூபா * அரலகங்வில நகரத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்துதல் - 5 மில்லியன் ரூபா |