2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிணையுறுதிக் கொடுக்கல் வாங்கல் சட்டமூலம் - பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளினால் கடன் பெறும் போது பிணையாக வைக்கக்கூடிய காணிகள் போன்ற நிலையான சொத்துக்கள் குறித்த தொழில்முயற்சிக்கு சொந்தமாக இல்லாத சந்தர்ப்பங்களில் இந்த தொழில்முயற்சிகளுக்கு சொந்தமான இயந்திரசாதனங்கள் போன்ற நிலையற்ற சொத்துக்களை பிணையாக வைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக் கொள்வதற்கு 2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பிணையுறுதிக் கொடுக்கல் வாங்கல் சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது. ஆயினும், இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை அமுல்படுத்தும் போது எழும் பிரச்சினைகள் காரணமாக இந்த சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்ள முடியாமற்போயுள்ளது. ஆதலால், 2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பிணையுறுதிக் கொடுக்கல் வாங்கல் சட்டத்தை நீக்கி நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் புதிய சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |