2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் (2016-2018) நடைமுறைப்படுத்தல் தொடர்பில் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான அத்தியாவசி செலவுகளை மேற்கொள்ளல் - அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டமொன்றாக உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பப்பணிகள் 2015‑10‑05 ஆம் திகதியன்று கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சியில் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இதற்கு ஒருங்கிணைவாக நாடுமுழுவதும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச மட்டங்களில் இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அங்கமாக இரசாயன பாவனையற்ற நிலையான கமச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் விவசாயிகளிடத்தில் பாரம்பரிய உள்நாட்டு விதை நெல் உற்பத்தியை பிரபல்யப்படுத்துவதற்குத் தேவைப்படும் ஆரம்ப விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |