• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் சுவிற்சலாந்திலுள்ள ஆட்சி பற்றிய பசெல் நிறுவகத்துக்கும் இடையிலான உசாத்துணை உடன்படிக்கை
- சுவிற்சலாந்திலுள்ள ஆட்சி பற்றிய பசெல் நிறுவனம் உலகளாவிய ஊழல் மற்றும் பிற நிதிக் குற்றங்களை தடுக்கும் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு செயலாற்றும் இலாபம் ஈட்டுதலை நோக்காகக் கொள்ளாத சுயாதீன நிறுவனமொன்றாகும். இலங்கை அரசாங்கத்தினால் ஊழல் மற்றும் நிதி குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பணிகள் சம்பந்தமாக சுவிற்சலாந்து அரசாங்கத்தின் உதவி கோரியதன் பயனாக இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது. இந்த உடன்படிக்கையைச் செய்து கொள்வதன் மூலம் ஊழல் அல்லது வேறு விதத்தில் முறைக்கேடாக அதிகாரத்தைப் பாவிப்பதன் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிதிகளை மீள பெற்றுக் கொள்வது சம்பந்தமாக செய்யப்படும் நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும். அதேபோன்று தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கை நீதிமன்ற அதிகார பிரதேசத்திற்கு வெளியே செய்வதற்கு நேரிடும் நீதிமன்ற நடவடிக்கைககளுக்காகவும் இந்த நிறுவனத்தின் வழிகாட்டல் கிடைக்கும். இதற்கமைவாக, உரிய உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.