2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசியலமைப்பை திருத்துவது தொடர்பிலான அமைச்சரவை உபகுழு - 2015‑11‑18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்று சனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கும் தேர்தல் முறையைத் திருத்துவதற்கும் தேவையான சட்டங்களை வரைவதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக பின்பற்றப்படவேண்டிய வழிமுறையையும் செய்யப்படவேண்டிய அரசியலமைப்பு ரீதியிலான மாற்றங்கள் சம்பந்தமாகவும் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்படுவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இந்த அமைச்சரவை உபகுழுவுக்கு பின்வரும் அமைச்சர்களை நியமிக்கும் பொருட்டு இந்த உபகுழுவின் தலைவராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்கள் * மாண்புமிகு லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் * மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்கள் * மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்கள் * மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்கள் * மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்கள் * மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் * மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் * மாண்புமிகு மனோ கணேசன் அவர்கள் * மாண்புமிகு மலிக் சமரவிக்ரம அவர்கள் |