2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு மாவட்ட செயலகத்தின் நிருமாணிப்பு வேலைகளை பூர்த்தி செய்தல் - கொழும்பு மாவட்டத்தின் மக்களுக்கு அரசாங்க நிறுவனங்களில் நிறைவேற்றிக் கொள்ளவேண்டிய தேவைகளை ஒரே கூரையின் கீழ் நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதிகளை ஏற்பாடு செய்யும் வகையில் மக்களுக்கு சேவை வழங்கும் அரசாங்க நிறுவனங்களை ஒரே கட்டடத்தில் தாபிக்கும் நோக்கில் இருபது (20) மாடிகள் கொண்ட கொழும்பு மாவட்ட செயலகமானது நாராஹேன்பிட்ட பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றதோடு, அதன் பெரும்பாலான பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது பல அரசாங்க அலுவலகங்கள் இந்த கட்டடத்தில் சேவைகளை நடாத்தி வருகின்றதோடு, தொடர்ந்தும் மீதியாயுள்ள வேலைகளை துரிதமாக பூர்த்தி செய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |