2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 14அ உறுப்புரையின் மூலம் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை அடிப்படை உரிமையொன்றாக எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அரசாங்கத்தின் உத்தியோபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பிரசைகளுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டில் சனநாயகத்தையும் நல்லாட்சிக்கோட்பாடுகளை மிகச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியும் ஊழலற்ற மிகச்சிறந்த பொறுப்புமிக்க அரசாங்க சேவையொன்றைத் தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |