2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துதல் - 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனம், இந்த சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்டுள்ள நீர்தேக்கப் பிரதேசங்கள், பள்ளத்தாக்குகள் , சேற்றுநிலங்கள், திறந்தவௌிகள், சதுப்புநிலங்கள் மற்றும் கால்வாய்கள் போன்றவற்றின் ஒதுக்கங்களை பாதுகாப்பது சம்பந்தமான பொறுப்பினை வகிக்கின்றது. இந்த சட்டத்திலுள்ள சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு நேரிட்டுள்ளமையைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |