2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம், குண்டசாலை - ஹரகம நீர் வழங்கல் கருத்திட்டம், பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அளவ்வ இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல் - அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கு 164.9 மில்லியன் ஐ.அ.டொலர்களும் குண்டசாலை - ஹரகம நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கு 146.31 மில்லியன் ஐ.அ.டொலர்களும் பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அளவ்வ இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கு 91.8 மில்லியன் ஐ.அ.டொலர்களும் என இந்த மூன்று (03) கருத்திட்டங்களுக்கும் 403.01 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்வசதியினை இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இந்தக் கருத்திட்டத்திற்கான உள்நாட்டு நிதியாக 54.44 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பொது திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |