2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அவசர அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்காக தொழினுட்ப ரீதியில் தேர்ச்சி பெற்ற தேடுமுயற்சி அத்துடன் காப்பாற்றும் குழுக்களை உருவாக்கும் கருத்திட்டம் - தற்போது வௌ்ளம், மண்சரிவு மற்றும் புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களும் அதேபோன்று இரசாயன ஆபத்துக்கள் போன்ற மனிதர்களினால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட அனர்த்தங்களும் நிகழும் உயர் ஆபத்து நிலவுகின்றமை தெரியவந்துள்ளது. இதற்கமைவாக, இத்தகைய அவசர அனர்த்தங்களின்போது உதவும் பொருட்டு "தொழினுட்ப ரீதியில் தேர்ச்சி பெற்ற தேடுமுயற்சி அத்துடன் காப்பாற்றும் குழுக்களை உருவாக்கும்" கருத்திட்டத்தை 349.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் 2016-2018 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |