• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையர் என்னும் அடையாளத்தை உறுதி செய்வதற்கு ஏற்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் வசிக்கும் பல்வேறுபட்ட இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஒருமைபாட்டையும் நிலையாக பேணும் அத்துடன் இலங்கையர் என்னும் அடையாளத்தை இலங்கையர்கள் அனைவரும் உறுதி செய்யும் நோக்குடன் நிகழ்ச்சித்திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும். ஒவ்வொரு இனத்திற்கும் உரியதான கலாசார மற்றும் மத அம்சங்களை பாதுகாப்பாக பேணி, நாட்டிலும் அதேபோன்று வெளிநாடுகளிலும் ஒரே இனமாக இலங்கையர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக இலங்கையர் அனைவரையும் தயார்படுத்த வேண்டியுள்ளது. இதன் மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய சிறந்த நாடொன்றை உருவாக்க முடியுமாகும். இதற்கமைவாக, 2016 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கையர் என்னும் அடையாளத்தை உறுதி செய்வதற்கு பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டல்கலை வழங்கும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.