2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் புற்றுநோயாளர்களுக்கு உயர்தரத்திலான அதிசக்திவாய்ந்த ஊடுகதிர்பிடிப்பு உபகரணங்களையும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும் கருத்திட்டம் - இரண்டாம் கட்டம் - இலங்கையில் புற்றுநோயாளர்களுக்கு உயர்தரத்திலான அதிசக்திவாய்ந்த ஊடுகதிர்பிடிப்பு உபகரணங்களை வழங்குதல், அவற்றைப் பொருத்துவதற்கு ஏற்ற கட்டடங்களை நிருமாணித்தல் முதலியன இந்தக் கருத்திட்டத்தின் கீழ் செய்யப்படும். இந்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் உரிய கட்டடங்கள் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன. கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை, அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலை, பதுளை பொது வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் புற்றுநோய் மத்திய நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பான ஊடுகதிர் பிடிப்பு கட்டடங்களை நிருமாணிப்பதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |