2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மணலாறில் இடம்பெயர்ந்துள்ள 1,000 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் மற்றும் வீடுகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக பயங்கரவாத தாக்குதல் அதேபோன்று கடும் வரட்சி மற்றும் வௌ்ளப்பெருக்கு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மாணலாறு பிரதேச செயலாளர் பிரதேச மக்களுக்கு 500 புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கும் ஏற்கனவே நிருமாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகளை மேம்படுத்துவதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |