• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திஸ்சமஹாராம நீர்வழங்கல் திட்டத்தை விருத்தி செய்தல்
- திஸ்சமஹாராம நீர்வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தின் சனத்தொகையானது 46,381 பேர்களாவர். ஏற்கனவே நீர் இணைப்புகள் தழுவப்பட்டுள்ள மொத்த சனத்தொகை சுமார் 30,500 பேர்களாவர். கமத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த பிரதேச மக்களில் சிறுநீரக நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதோடு, நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக நீண்டகால சுகாதார பிரச்சினைகளை உருவாக்கும் நச்சுப் பொருட்கள் மற்றும் உலோகங்கள் குடிநீருடன் சேர்வதை தவிர்ப்பது கடினமாய் அமைந்துள்ளது. ஆதலால், திஸ்சமஹாராம மற்றும் கிரிந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமானதும் தரம் மிக்கதுமான குடிநீர் வழங்குவதற்காக 393 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் திஸ்சமஹாராம நீர்வழங்கல் திட்டத்தை விருத்தி செய்வதற்காக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.