• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹாபொல புலமைப்பரிசில் கிடைக்கப்பெறாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகையை 2,500/= ரூபாவிலிருந்து 4,000/= ரூபா வரை அதிகரித்தல்
- காலஞ்சென்ற லலித் அத்துலத்முதலி அவர்களின் எண்ணக்கருவின் மீது மஹாபொல புலமைப்பரிசில் திட்டமானது 1981 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதற்கு ஒருங்கிணைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டமொன்று பொதுத்திறைசேரியின் நிதிகளின் மூலம் பல்கலைக்கழகங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அண்ணளவாக 25,000 மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழக நுழைவினைப் பெறுவதோடு, அதில் சுமார் 12,000 மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசும் சுமார் 7,000 மாணவர்களுக்கு உதவுதொகையும் வழங்கப்படுகின்றது. தற்போது மஹாபொல புலமைப்பரிசிலுக்கு உரிமைப் பெறும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 5,000/- ரூபா உரியதாவதோடு, மாணவர் உதவித்தொகைக்கான உரிமை கிடைக்கப் பெறும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கிடைக்கப் பெறுவது மாதாந்தம் 2,500/- ரூபா மாத்திரமாகும். இந்த முரண்பாட்டினை நீக்கும் அத்துடன் பல்கலைக்கழக நுழைவினைப் பெறும் மாணவர்களின் பொருளாதார கஷ்டநிலை இல்லாமல் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை 2,500/= ரூபாவிலிருந்து 4,000/= ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.