• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்காசிய வனசீவராசிகள் வலுவூட்டல் வலையமைப்பு (SAWEN) தொடர்பான நியதிச்சட்டம்
- தெற்காசிய வனசீவராசிகள் வலுவூட்டல் வலையமைப்பு, தொலைத்தொடர்பாடல், ஒருங்கிணைப்பு, இணைந்து செயலாற்றுதல், ஆற்றல் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு மூலம் வனவுயிர் துறை மற்றும் அதுசார்ந்த குற்றங்களை தடுக்கும் பொருட்டு வனவுயிர் சட்டங்களின் அமுலாக்கத்தை பலப்படுத்தும் நோக்குடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உடன்பாடாகும். SAWEN செயற்பாடுகளை இலங்கையில் கூட்டிணைக்கும் பொறுப்பு வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முக்கியமாக கையளிக்கப்பட்டுள்ளது. உயிரின பல் வகைமைகளில் நிறைந்த எமது நாட்டிற்கு மேற்குறிப்பிட்ட வலுவூட்டல் வலையமைப்பின் கீழ் ஏற்படுத்திக் கொண்டுள்ள வலய ஒத்துழைப்பின் மூலம் பல பயன்களைப் பெற முடியுமாகும். இதற்கமைவாக, தெற்காசிய வனசீவராசிகள் வலுவூட்டல் வலையமைப்பு (SAWEN) தொடர்பான நியதிச்சட்டத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.