• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை
- மனித குடியேற்ற அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் முகவராண்மையான ஐக்கிய நாடுகள் மனித குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தினால் மதியுரை மற்றும் மேற்பார்வை பணிகளுக்கு மேலதிகமாக அங்கத்துவ நாடுகளுக்கு நகர நிருவாகம், வீடமைப்பு, சுற்றாடல் முகாமைத்துவம், கழிவு முகாமைத்துவம், வறுமையொழிப்பு போன்ற துறைகளில் தொழினுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் முக்கிய பணியினை நிறைவேற்றுகின்றது. பரஸ்பர ஒத்துழைப்புக்கான வசதிகளை வழங்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் மனித குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்திற்கும் இலங்கையின் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.