• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவசர விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை நிருமாணித்தல்
- அரசாங்க வைத்தியசாலைகளில் அவசர விபத்து மற்றும் தீவிர சிகிச்சை சம்பந்தமான கொள்கையானது ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பின்வரும் வைத்தியசாலைகளில் அவசர விபத்து மற்றும் தீவிர சிகிச்சசை பிரிவுகளை துரிதமாக நிருமாணிப்பதற்கு இயலுமாகும் வகையில் உரிய மதியுரை சேவை ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்கும் இந்த பிரிவுகளின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள மத்திய பொறியியல் சேவைகள் கம்பனிக்கு கையளிப்பதற்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலை - 468.84 மில்லியன் ரூபா

* பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலை - 467.17 மில்லியன் ரூபா

* யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை - 589.82 மில்லியன் ரூபா

* கல்முனை வடக்கு தள வைத்தியசாலை - 374.22 மில்லியன் ரூபா