2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தென்மாகாண அபிவிருத்தி சபையைத் தாபித்தல் - தெற்குவலய பொருளாதார வளங்களை நிலையாகப் பயன்படுத்தி இந்த வலயத்தில் வசிக்கும் மக்களின் வாழக்கை நிலையை கட்டியெழுப்புதல், வலய அபிவிருத்திப் பணிகளை ஒருங்கிணைத்தல், புதிய சேவைகளையும் முதலீடுகளையும் உருவாக்குதல், நிலவும் சேவை நிலையங்களையும் கைத்தொழில்களையும் மேம்படுத்துவதன் மூலம் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் போன்றவை தெற்கு அபிவிருத்தி அமைச்சின் பணிகளாகும். இந்த பணிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தென் மாகாண அபிவிருத்தி சபையைத் தாபிப்பதற்கும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களும் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்னெ மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேச அதிகார பிரதேசங்களை இந்த சபையின் நோக்கங்களுக்குரிய பிரதேசங்களாக நிர்ணயிப்பதற்கும் இந்த நோக்கத்திற்காக சட்டங்களை வரைவதற்கும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |