2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அழிக்கமுடியாத நன்கொடை உறுதிகளை இரத்துச்செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - நன்கொடை உறுதிகளை நீதிமன்ற தீர்ப்பொன்று பெற்றுக் கொள்ளாது இரத்துச் செய்வதற்கு நன்கொடையாளருக்கு இயலுமென மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது மேம்முறையீட்டு நீதிமன்றத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நன்கொடை உறுதிகளை தற்றுணிபின் பேரில் இரத்துச் செய்வதற்கு நன்கொடையாளர் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக சில நன்கொடை பெறுநர்களின் உரிமை சம்பந்தமாக பிரச்சினைகள் எழுந்துள்ளன. நன்கொடை உறுதிகள் மூலம் உரிமையாகியுள்ள சொத்துக்களை பிணையாக வைத்துக் கொண்டு, கடன் வழங்கும் நிறுவனங்களும் இதன் காரணமாக பிரச்சினைகளுக்கு ஆட்பட்டுள்ளன. இதற்கமைவாக, இதுசம்பந்தமாக சட்ட ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசின் பிரகாரம் தகுந்த தத்துவமுள்ள நீதிமன்றமொன்றினால் செய்யப்படும் கட்டளையொன்றின் மீது மாத்திரம் நன்கொடை உறுதிகளை இரத்துச் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு சட்டங்களை வரைவதற்காக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .
|