2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அக்குரஸ்ஸ பேருந்து நிலையம் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல் - அக்குரஸ்ஸ நகர அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான சுமார் 13 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக, தற்போது பேருந்து நிலையமுள்ள காணியிலிருந்து அதனை அகற்றி புதிதாக சுவீகரிக்கப்பட்ட காணியின் ஒரு பகுதியில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போதைய பேருந்து நிலையம் அமைந்துள்ள காணியை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துவது இயலுமாகும் வகையில் இந்தக் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு இறையிலிகொடையொன்றாக வழங்குவதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |