• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அடிக்கடி நிகழும் காலநிலை பிரச்சினைகளின் தாக்கங்களைக் குறைப்பதற்காக வளி மண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் ஆற்றலை மேம்படுத்தும் கருத்திட்டம்
- இலங்கையில் இயற்கை அனர்த்தங்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவை காலநிலை சார்ந்தவையாவதோடு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌ்ளம், வறட்சி, மின்னல், கடுமையான காற்று போன்றவற்றினால் அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. ஆதலால், செம்மையான காலநிலை மற்றும் அபாய முன்னறிவிப்பு சேவைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் வளிமண்டவியல் திணைக்களத்தின் தொழினுட்ப ஆற்றலை மேம்படுத்தும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, "அடிக்கடி நிகழும் காலநிலை பிரச்சினைகளின் தாக்கங்களைக் குறைப்பதற்காக வளி மண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் ஆற்றலை மேம்படுத்தும்" பொருட்டிலான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது