• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் சேர்பியாவுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை உடன்படிக்கை
- கிழக்கு ஐரோப்பாவில் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடொன்றான சேர்பியா, சுற்றுலாத்துறை அந்நாட்டின் தேசிய வருமானத்திற்கு ஆகக்கூடிய பங்களிப்பு வழங்குவதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 13 நாடுகள் இருதரப்பு விமானசேவை உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையின் அதிகரித்து வரும் கேள்வியை கருத்திற்கொள்ளும் போது சேர்பியா ஏனைய நாடுகளுடன் செய்துகொண்டுள்ள விமானசேவை உறவுகளை இலங்கையின் விமானசேவை மற்றும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதென தெரிய வருகின்றது. முக்கியமாக உத்தேச இருதரப்பு உடன்படிக்கையின் கீழ் சேர்பியாவின் விமானங்களுக்கு மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கும் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்குமான அங்கீகாரத்தினை வழங்குவதன் மூலம் இந்த விமான நிலையத்தை பயனுள்ள விதத்தில் உபயோகிக்க முடியுமாகும். இதற்கமைவாக, இலங்கைக்கும் சேர்பியாவுக்குமிடையில் ஏற்கனவே உத்தியோகத்தர்கள் மட்டத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ள விமான சேவைகள் உடன்படிக்கையை தத்துவம்பெற்ற பிரதிநிதி ஒருவர் மூலம் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர், குறித்த உடன்படிக்கையை செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.