• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை எழுச்சி அபிவிருத்திக் கருத்திட்டம்
- "பொலன்நறுவை எழுச்சி" அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பொலன்நறுவை உட்பட அதற்கு அண்மையிலுள்ள ஏனைய பிரதான நகரங்களை இணைத்து போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்வது முன்னுரிமை விடயமொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. ஏற்கனவே பொலன்நறுவை மாவட்டத்தின் ஊடாக செல்லும் புகையிரதம் இருந்தபோதிலும் நீண்ட நேரம் செலவாகும் அத்துடன் போதிய அளவு புகையிரத போக்குவரத்து இல்லாமை போன்ற காரணங்களினால் புகையிரதம் மக்களிடையே பிரபல்யப்படவில்லை. ஆதலால், மாகோவிலிருந்து மட்டக்களப்பு வரையிலும் கல்ஓயாவிலிருந்து திருகோணமலை வரையிலுமான புகையிரதப் பாதை முறைமையை புனரமைப்பதற்கும் மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் விதத்தில் புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்குமான விரிவான சாத்தியத்தகவாய்வொன்றைச் செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.