2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் மனிதவள அபிவிருத்திக்காக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல் - இலங்கை அரசாங்கத்திற்கும் தாய்லாந்து அரசாங்கத்திற்கும் இடையேயான இருதரப்பு தொழினுட்ப ஒத்துழைப்பானது இலங்கையின் மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும். தாய்லாந்து சருவதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவராண்மையினால் கமத்தொழில், உணவு தொழினுட்பம், கிராமிய அபிவிருத்தி, தன்னிறைவான பொருளாதாரம், சுற்றுலாத்துறை முகாமைத்துவம், இராஜதந்திர பயிற்சி போன்ற துறைகளுக்குரியதாக புலமைப்பரிசில் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 2015-2019 காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் கூட்டாக ஐந்து (05) வருடகால அபிவிருத்தி ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இருநாடுகளுக்கும் இடையில் தொழினுட்ப ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்துவதற்காக தாய்லாந்து அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |