• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் மறுமலர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்தல்
- சிறிய தேயிலை மற்றும் இறப்பர் செய்கை துறையை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் நிதியுதவியுடன் அரசாங்கத்தினால் இந்த துறையில் மறுமலர்ச்சி நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே மாத்தறை, காலி, இரத்தினபுரி, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் பயிர்ச்செய்யப்பட்டுள்ள 5,500 ஹெக்டயார் காணியிலான தேயிலை செய்கையை அதிகரித்துக் கொள்வத்றகு உதவி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று மொனராகலை, அம்பாறை மாவட்டங்களில் புதிய இறப்பர் தோட்டங்களை 3,000 ஹெக்டயார்களாக அதிகரித்துக் கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டமானது அதன் பங்களிப்பை வழங்கும். இந்த கருத்திட்டத்திற்கான மொத்த முதலீடு 65.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகுமென்பதோடு, இதில் 25.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் விவசாய அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தினால் வழங்கப்படுகின்றது. இதற்கமைவாக, அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்துடன் உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.