2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறமை மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - களுத்துறை, கஸ்பேவ, பழைய அநுராதபுரம் நெய்யறி துணை நிலையங்களை நிருமாணித்தலும் புதிய அநுராதபுரம் நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தலும் - பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறமை மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் களுத்துறை, கஸ்பேவ, பழைய அநுராதபுரம் நெய்யறி துணை நிலையங்களை நிருமாணித்தல் மற்றும் புதிய அநுராதபுரம் நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தல் முதலியவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த விலையை முன்வைத்த கேள்விதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |