2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபை அரசாங்க காணிகளில் நடாத்திச் செல்லும் பண்ணைகளின் உரிமையை நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்த சபைக்கு உடைமையாக்குதல் - இலங்கையில் கால்நடைவளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக விவசாயிகளுக்கும் தொழில்முயற்சியாளர்களுக்கும் தரம்மிக்க உதவிச் சேவைகளை வழங்கும் பொருட்டு தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபையினால் நாடுபூராவும் அரசாங்க காணிகளில் 13 பண்ணைகளை நடாத்திச் செல்கின்றது. ஆயினும், இதுவரை இந்த காணிகளின் உரிமையோ அல்லது குத்தகை உரிமையோ இந்த சபைக்கு கையளிக்கப்படாததோடு, இந்த காணிகள் அரசாங்கத்திற்குச் சொந்தமாகவுள்ளன. தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபையின் பண்ணைகளை மிகப் பயனுள்ள வகையில் விருத்தி செய்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இந்த பண்ணைகளை நடாத்திச் செல்லும் காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபைக்கு கையளிக்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினாலும் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |