2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2016 - 2018 உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல் - அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2016 - 2018 உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துவதற்கு 2015‑10‑14 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் அத்துடன் மேலதிக உணவு பயிர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதியைக் குறைத்து அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்ளும் நோக்குடன் கமத்தொழில் அமைச்சினால் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிர் உற்பத்தியை விருத்தி செய்வதற்கும் கமத்தொழில் அபிவிருத்திக்குத் தேவையான முக்கிய 14 விடயத்துறைகளைக் கண்டறிந்து அதற்குரியதாக நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முக்கிய இரண்டு துறைகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2016-2018 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்வதற்குமாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |