2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு கடற்றொழில் படகுகளை ஒழுங்குறுத்துதல்) சட்டத்தை திருத்துதல் - இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் படகுகள் மூலம் மீன் பிடித்தலையும் அதற்குரிய நடவடிக்கைகளையும் ஒழுங்குறுத்துதல், கட்டுப்படுப்படுத்துதல், முகாமித்தல் என்பன பொருட்டு தேவையான ஏற்பாடுகள் 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு கடற்றொழில் படகுகளை ஒழுங்குறுத்துதல்) சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியினுள் இந்த துறைக்குரியதாக சருவதேச மற்றும் வலய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிசமான மாற்றங்களின் விளைவாக நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளை திருத்தி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு கடற்றொழில் படகுகளை ஒழுங்குறுத்துதல்) சட்டத்தை திருத்தும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |