2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல்கட்ட நிதி வசதிகளின் கீழும் அரசாங்க நிதியங்களின் மூலமும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் மூன்று கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் பாரிய கொழும்பு நகரத்தின் வினைத்திறன்மிக்க நீர்வழங்கலை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூன்றாவது கட்டத்திற்கான மொத்த முதலீடானது 168.46 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும் என்பதோடு, இந்த முதலீட்டிலிருந்து 40.46 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கைளக் கொண்ட தொகையானது இலங்கை அரசாங்கத்தினால் உறப்படும். மீதி 128 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகையானது ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து சலுகைக் கடனாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |