2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரியினை அதிகரித்தல் - 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுக்கு அமைவாக 2015‑10‑03 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் சிகரட் மற்றும் மதுபானம் உட்பட இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு ஸ்பிரிட் ஆகியவற்றின் மீதான வரியை அதிகரிக்கும் பொருட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |