2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மேற்கு பிராந்திய மாநகர பாரிய திட்டத்தை தயாரித்தல் - மேல் மாகாணத்தில் மாநகர பாரிய திட்டத்தை தயாரிப்பதற்குத் தேவையான தரவுகளை தயாரித்தல், ஆரம்ப திட்டங்களை ஒழுங்கு செய்தல், சட்டங்களை ஆக்குதல் போன்ற அடிப்படை நோக்கங்கள் பல ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, கருத்திட்டத்தின் பணிகளை மேலும் நடாத்திச் செல்வதற்குத் தேவையான மதியுரையை வழங்கும் உள்நாட்டு வெ ளிநாட்டு நிபுணர்களின் சேவையை மேலும் நான்னு (04) மாத காலத்திற்குப் பெற்றுக் கொள்வதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .
|