• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - சப்ரகமுவ மாகாணத்தில் நான்கு (04) சிவில் வேலை ஒப்பந்த பொதிகள் சார்பில் ஒப்பந்தத்தை வழங்குதல்
- தேசிய நெடுஞ்சாலைகள், மாகாண வீதிகள், துணைவீதிகள் உட்பட நுழைவுப்பாதை வீதிகள் அடங்கலாக பிரதேச சபை வீதிகளை புனரமைப்பதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட கிராமிய மையநிலையங்களுக்கிடையிலான இணைப்புகளை விருத்தி செய்யும் நோக்கில் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,972 மில்லியன் ரூபா செலவில் கேகாலை மாவட்டத்தில் 75 கிலோ மீற்றர்களைக் கொண்ட கிராமிய வீதிகளையும் 6,425 மில்லியன் ரூபா செலவில் இரத்தினபுரி மாவட்டத்தில் 255 கிலோ மீற்றர்களைக் கொண்ட கிராமிய வீதிகளையும் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான நான்கு ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .