• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான கருத்திட்ட முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் மேற்பார்வை ஆலோசனை தொடர்பான ஒப்பந்தத்தை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் நிதியங்களின் மீது நடைமுறைப்படுத்தப்படும் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீர் பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு பின்வரும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

(i) 65 கிலோ மீற்றர் நீளமான இஹல அலஹர கருத்திட்டத்தின் மூலம் மகாவலிகங்கை நீரை களுகங்கை மற்றும் மொரகஹந்த நீர் தேக்கத்திலிருந்து புதிதாக நிருமாணிக்கப்படும் வடமத்திய மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் மூலம் பகிர்ந்தளித்தல்.

(ii) புதிதாக நிருமாணிக்கப்படும் வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் மூலம் தம்புளுஓயா மற்றும் நாலந்தா நீர்த்தேக்கத்தின் மேலதிக மகாவலி நீரை ஹக்வட்டுனாஓயா மற்றும் இஹலமீ ஓயா ஆற்றுப்படுகைக்கு இடுவதன் மூலம் வடமேல் மாகாணத்தில் நீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு நீர் வழங்குதல்.

(iii) மகாவலிகங்கைக்குக் குறுக்காக மினிப்பேயிலுள்ள அணையின் உயரத்தை அதிகரித்து 74 கிலோ மீற்றர் நீளமான மினிப்பே இடதுகரையின் பிரதான கால்வாயை புனரமைத்தல்.

அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்தக் கருத்திட்டங்களுக்குரிய நிகழ்ச்சித்திட்டங்களை முகாமித்தல். திட்டமிடுதல், மேற்பார்வை செய்தல் போன்றவற்றுக்கான மதியுரை சேவை ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.