• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஆராய்ச்சி சபையை நியதிச்சட்ட நிறுவனமொன்றாக தாபித்தல்
- நாட்டில் செயல் ஊக்கம் மிக்க விஞ்ஞான, தொழினுட்ப சமூகமொன்றை உருவாக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப ஆராய்ச்சிகளை திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல், அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை நிறைவேற்றுதல் தேசிய ஆராய்ச்சி சபையிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டில்் இந்த நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ளது பாராளுமன்ற சட்டமொன்றினால் அல்ல அப்போதைய சனாதிபதி அவர்களினால் அரசியலமைப்புக்கு அமைவாக கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் கீழ் வழங்கப்பட்ட கட்டளையொன்றின் மூலமாகும். இந்த நிறுவனத்தின் பணிகளை முறையாக நடாத்திச் செல்லும் பொருட்டு பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் நியதிச் சட்ட நிறுவனமொன்றாக தேசிய ஆராய்ச்சி சபையை தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை வரைவதற்காக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.