2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தண்டனை சட்டக் கோவையை திருத்துதல் - இன மற்றும் மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி பொதுமக்களை தூண்டுதல், கடும் மதவாத போக்கினை அடிப்படையாகக் கொண்டு தீய கருத்துடனான சொற்களைப் பாவித்தல், இதுசார்ந்த துண்டுப் பிரசுரங்கள் போன்றவை கடந்த காலப்பகுதியில் இன மற்றும் மத பிரிவுகளுக்கிடையில் வேற்றுமையை உருவாக்குவதற்கு காரணமாய் அமைந்தது. இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சட்டம் ஆக்கப்பட வேண்டுமெனவும் இந்த சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. இதற்கமைவாக, தண்டனைச் சட்ட கோவைக்கு பொருத்தமான திருத்தங்களை செய்யும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |