2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சிச் சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்காக மேலதிக நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல் - உலக வங்கியினால் வழங்கப்படும் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் அவுஸ்திரேலிய நிதி பணிகள் மற்றும் வர்த்தக திணைக்களத்தினால் வழங்கப்படும் 20.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் கொண்ட செலவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சிச் சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டம் 2010 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்தப்பட்டுவருகின்றது. இந்தக் கருத்திட்டத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களைப் போன்று அதற்கண்மித்த மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தும் பொருட்டு மேலும் 20 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக நிதியினை உலக வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |