• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவில் 60 வருடங்களை பூர்த்தி செய்ததன் காரணமாக மத நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
- இலங்கையும் தாய்லாந்தும் மத, கலாசார வர்த்தக துறைகளில் பல வருட காலமாக உறவினை பேணி வருகின்றன. இருநாடுகளுக்குமிடையே முறையான இராஜதந்திர உறவுகள் 1955 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 2015 நவெம்பர் மாதம் 20 ஆம் திகதியன்றுக்கு தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த விடயத்தை நோக்காகக் கொண்டு புத்தசாசன அமைச்சும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் தாய்லாந்துக்கான இலங்கை தூதரகமும் இணைந்து மத நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்காக புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.