• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா நோய் தடுப்பதற்கான உலக நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்தல்
- உலக மட்டத்தில் காணப்படும் சுகாதார பிரச்சினைகளான எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா போன்ற மூன்று (03) தொற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் 2002 ஆம் ஆண்டில் உலக தலைவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா நோய்களை தடுப்பதற்கான உலக நிதியம் தாபிக்கப்பட்டது. இந்த நிதியத்தின் மூலம் நோய் தடுப்புக்காக இந்த நோய் பரவலாகவுள்ள நாடுகளில் அரசாங்க நிறுவனங்களுக்கும் பிற அமைப்புகளுக்கும் நிதி வசதிகள் வழங்கப்படும். இதுவரை இலங்கை மலேரியா நோயை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதோடு, 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மலேரியா நோய் தொற்றிய நோயாளிகள் பதிவுசெய்யப்படவில்லை. ஆதலால், இந்த ஆண்டில் இலங்கை மலேரியா நோயை இல்லாதொழித்த நாடொன்றாக உலக சுகாதார அமைப்பினால் உறுதிப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக, மலேரியா நோயை இல்லாதொழித்த முதலாவது அயனமண்டல நாடாகும் கௌரவமும்கூட இலங்கைக்கு கிடைக்கும். உலக நியதித்தின் நிதி ஒழுங்குவிதிக்கு அமைவாக 2015 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்தும் கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட வேண்டிய உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.