2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடுதல் - 2015 - 2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஒன்பது (09) வருடங்கள் தேசிய பாதுகாப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் திசெம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று கொண்டாடப்பட்டுள்ளதோடு, 2015 ஆம் ஆண்டின் தேசிய பாதுகாப்புத் தினம் "பாதுகாப்பான இலங்கை" என்னும் பிரதான தொனிப்பொருளின் கீழும் "ஒன்றிணைவோம் அனர்த்தங்களைத் தவிர்ப்போம்" என்னும் துணை தொனிப்பொருளின் கீழும் பொலன்நறுவை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும், இந்தக் கேட்போர்கூடத்தின் நிருமாணிப்புப் பணிகள் எதிர்பார்க்கப்பட்டவாறு நிறைவடையாமையினால் 2015 ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்புத் தினத்தை பொலன்நறுவை றோயல் கல்லூரி கேட்போர்கூடத்தில் நடாத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |